கொரோனா வைரஸ் -Full explanation
Corona Virus முகத்துக்கு முகமூடி(Face Mask) போட்டுகிட்டா கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியுமா? உண்மை என்ன? ; சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை கொண்டு இந்த வைரஸ் தொற்றை கண்டறியலாம். மேலும் இந்த தொற்று பாதித்த ஒருவரிடமிருந்து வேகமாக மற்றவர்களுக்கு பரவிவிடுகிறது. வைரஸ் தொற்று பாதித்த ஒருவர் இருமும் போதும், தும்மும் போது அருகில் இருப்பவர்களை எளிதில் அடைகிறது. மேலும் அவரை தொடுவதன் மூலமும் கைகுலுக்குவதன் மூலமும், கட்டிஅணைப்பதின் மூலமும் கூட இந்த தொற்று எளிதில் வேகமாக பரவுகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அதிகம் செல்லவேண்டாம். வெளியிலிருந்து வந்ததும் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்த பிறகு சாப்பிட வேண்டும். வெளி இடங்களில் எந்த பொருள்களையும் உள்ளங் கையில் அழுத்தி தொடுவதும் பிடிப்பதும் கூட தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய இந்த நேரத்தில் குறிப்பாக அனைவரது கவனமும் முகமூடியின் மீது திரும்பியுள்ளது. வைரஸ் தொற்று வராமல் இருக்க முகமூடி அணிந்தால் போதும் என்று நினைத்து எல்லோரும் முகமூடி அணிந்து கொள்கிறார்கள். இதனால் எந...